
செய்திகள் மலேசியா
பாதுகாப்பு அச்சுறுத்தல்: அண்டை நாடுகளின் ஒத்துழைப்பைக் கோர ஹிஷாமுடின் வலியுறுத்து
புத்ராஜெயா:
மலேசியா எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஒடுக்குவதில் அண்டை நாடுகளின் வலுவான ஒத்துழைப்பும், ராஜதந்திர நடவடிக்கைகளும் தேவை என மூத்த தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
தேசிய எல்லைகளையும், பரந்து விரிந்துள்ள நீர்ப்பரப்பை பாதுகாப்பதிலும் ஆசியான் வட்டாரத்தில் உள்ள அண்டை நாடுகளுடன் தற்காப்பு துறை சார்ந்த ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
இதை சாத்தியமாக்க, இன்றளவும் நடைமுறையில் உள்ள மலேசியா, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய மூன்று நாடுகள் இடையேயான முத்தரப்பு ஒத்துழைப்பு ஏற்பாடு ஒப்பந்தம், அடுத்த கட்டமாக மூன்று நாடுகளின் தற்காப்பு அமைச்சர்கள் மட்டத்திலான உடன்பாடாக மேம்பட வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
"எதிர்வரும் 27ஆம் தேதி சுரபாயா (இந்தோனீசியா) சென்று மற்ற இரு நாடுகளின் தற்காப்பு அமைச்சர்களுடன் ஆலோசிக்க உள்ளேன். அப்போது தற்காப்பு துறையில் ஒத்துழைப்பது தொடர்பாக இந்தோனீசியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளேன்.
"இரு நாடுகளுக்கும் இடையே இத்தகைய ஒப்பந்தம் கையெழுத்தாவது இதுவே முதல் முறை. இதற்கும் மேலதிகமாக, இரு நாடுகளுக்கு இடையேயான பொது எல்லைக்கான கமிட்டியின் கூட்டம் வரும் பிப்ரவரி மாதம் மலேசியாவில் நடைபெறும்," என்றார் அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன்.
இதற்கிடையே, எதிர்வரும் 23ஆம் தேதி, ஃபிரான்ஸ் ஆயுதப்படைகளின் அமைச்சர் Florence Parly மலேசியாவுக்கு வருகை தர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
June 30, 2025, 4:59 pm
பிரதமர் நாளை தொடங்கி மூன்று நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ தொடர் பயணங்களைத் தொடங்குகிறார்
June 30, 2025, 4:56 pm