நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சூதாட்டம்,  மோசடி உள்ளடக்கங்களுக்கு முகநூல் பாவமான முதன்மை தளமாக உள்ளது: ஃபஹ்மி 

புத்ராஜெயா:

மலேசியர்களுக்கு முகநூலை ஒரு பாவமான தளம் என்று  தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் வர்ணித்தார்.

ஏனெனில் அது முறையே 78% இணையவழி சூதாட்டத்திற்கும் 53% மோசடி உள்ளடக்கத்திற்கும் பங்களிக்கிறது.

சூதாட்ட உள்ளடக்கம் தொடர்பான உள்ளடக்கத்தைக் குறைக்குமாறு அரசாங்கம் அந்தத் தளத்தைக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும், இது யூ டியூபை (18%),  டிக்டாக்கை (4%) விட மிக அதிகமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

மோசடி உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை முகநூல் மீண்டும் 53% உடன் முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து டிக்டாக் (39%),  த்ரெட்ஸ் (5%) ஆகியவை உள்ளன.

மலேசியர்களை எந்தத் தளம் அதிகம் 'பாவம்' செய்கிறது என்று கூற வேண்டுமானால், ஆன்லைன் சூதாட்டத்தைப் பொறுத்தவரை முகநூல் தான் முதலிடம் வகிக்கிறது.

மோசடிகளைப் பொறுத்தவரையிலும், 53% உடன் முகநூல் தான் முதலிடத்தில் உள்ளது என்று புத்ராஜயாவில் அவர் கூறினார்.

இதற்கிடையில், ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 17 வரையிலான காலகட்டத்தில், மொத்தம் 470,593 உள்ளடக்கங்களை நீக்குமாறு கோரப்பட்டதாகவும், அதில் 436,661 உள்ளடக்கங்கள், அதாவது 93%, சம்பந்தப்பட்ட தளங்களால் நீக்க ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும் ஃபஹ்மி கூறினார்.

மொத்தத்தில், 64% சூதாட்ட உள்ளடக்கம் என்றும், மீதமுள்ள 27% மோசடிகள் என்றும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset