செய்திகள் மலேசியா
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சமமான ஒதுக்கீட்டை உறுதி செய்ய சிறப்புச் சட்டம் வேண்டும்: கோபிந்த் சிங்
கோலாலம்பூர்:
எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சமமான ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய ஒரு சிறப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.
ஜசெக தேசியத் தலைவர் கோபிந்த் சிங் டியோ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
இந்த சீர்திருத்தங்கள் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும். அந்தந்த நேரத்தில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் விருப்பத்தை மட்டுமே சார்ந்திருக்கக் கூடாது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கெஅடிலான் தேசிய மாநாட்டில் பிரதமர் அன்வர் இப்ராஹிம் வெளியிட்ட அறிவிப்பு குறித்து கருத்து தெரிவிக்குமாறு கேட்டபோது,
இது வெறும் அரசாங்க சீர்திருத்தமாக இல்லாமல், ஒரு நிரந்தர சீர்திருத்தமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் இன்று கேஎல் சென்ட்ரலில் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த விஷயத்தை தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளை மட்டும் சார்ந்திருக்காமல், நிரந்தரமாக நிறுவனமயமாக்குவதற்கு ஏதுவாக தற்போதுள்ள சட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்.
இந்த விவகாரத்தை ஜசெக கட்சி இதற்கு முன்பும் அன்வரிடம் பலமுறை எழுப்பியதாக அவர் கூறினார்.
இந்த விஷயத்தை நான் அவரிடம் மீண்டும் எழுப்புவேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 18, 2026, 4:48 pm
தாவாவ் விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்: நபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 12 பிரம்படிகள்
August 18, 2026, 4:27 pm
கோலாலம்பூர் கோபுரம் சலுகை வழக்கு விசாரணை: 29 அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணைக்கு அழைக்கப்படுவர்
August 18, 2026, 3:42 pm
சூதாட்டம், மோசடி உள்ளடக்கங்களுக்கு முகநூல் பாவமான முதன்மை தளமாக உள்ளது: ஃபஹ்மி
August 18, 2026, 3:41 pm
நெகிரி செம்பிலான் சட்டமன்ற சபாநாயகராக அவலுடின் இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டார்
August 18, 2026, 3:41 pm
RTS LINK ரயில் போக்குவரத்து சேவை: சில நொடிகளில் குடிநுழைவுச் சோதனையை நிறைவு செய்ய புதிய திட்டம்
August 18, 2026, 1:40 pm
தாபோங் ஹாஜி விசாரணை தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கைக் காலத்திற்குள் அடங்காது: பிரதமர்
August 18, 2026, 1:39 pm
2026ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு அக்டோபர் 26இல் தொடங்குகிறது: கல்வியமைச்சு
August 18, 2026, 1:38 pm
ஜிஎஸ்டி, எஸ்எஸ்டி ஆகியவற்றை ஒருங்கிணைப்பது குறித்த ஆய்வுக்கு அரசு தயாராக உள்ளது: பிரதமர்
August 18, 2026, 1:04 pm
