நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாபோங் ஹாஜி விசாரணை தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கைக் காலத்திற்குள் அடங்காது: பிரதமர்

புத்ராஜெயா:

தாபோங் ஹாஜி தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் விசாரணையானது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அடங்காது.

மாறாக, அந்த அறிக்கையின் காலத்திற்கு முன்னும் பின்னும் நீட்டிக்கப்படுகிறது.

அரச விசாரணை ஆணையத்தின் கவனத்தில் உள்ள காலக்கட்டத்திற்கு அப்பால் விசாரணைகளை நடத்துவதற்கு அதிகாரிகளுக்கு எந்தத் தடையும் இல்லை என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

உண்மையில், தற்போது அனைத்து நடவடிக்கைகளும் ஆய்வுகளும் விசாரணைகளும் ஆர்சிஐக்கு அப்பாற்பட்டவை. ஆர்சிஐ தான் அதன் தாய் அமைப்பு.

ஆர்சிஐ அறிக்கை நேரத்திற்கு முன்னும் பின்னும் விசாரணைகளுக்கு எந்தத் தடையும் இல்லை. இதைத்தான் அமலாக்க மற்றும் விசாரணை அமைப்புகள் செய்து வருகின்றன.

இன்று நிதியமைச்சில் நடைபெற்ற 2027 பட்ஜெட் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset