நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் சட்டமன்ற சபாநாயகராக அவலுடின் இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டார்

சிரம்பான்:

ரெம்பாவ் அம்னோ துணைத் தலைவர் அவலுடின் சயீத், 16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தின் சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.

டாக்டர் அவலுடினின் தேர்தல் தீர்மானத்தை மந்திரி புசார் இஸ்மாயில் லாசிம் முன்மொழிய, லிங்கி சட்டமன்ற உறுப்பினர் ஃபைசல் ராம்லி வழிமொழிந்தார்.

பின்னர், 66 வயதான அவலுடின், இங்குள்ள விஸ்மா நெகிரியில் நடைபெற்ற 16ஆவது நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தின் முதல் பதவிக்காலத்தின் முதல் சிறப்பு அமர்வில், சட்டமன்றச் செயலாளர் முகமது அமின் லுடின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

முன்னதாக, சட்டமன்ற சபாநாயகர் பதவியை நிரப்புவதற்கான வேட்புமனு ஒன்று தனது கட்சிக்கு வந்துள்ளதாக அமின் அறிவித்தார்.

நெகிரி செம்பிலான் அரசியலமைப்பின் விதி 2, ஆணை 7 (1)-இன் படி, அவையின் சபாநாயகர் பதவிக்கான பரிந்துரையை நான் பெற்றுள்ளேன். அதற்கான அறிவிப்பை நான் ஏற்கனவே பெற்றுவிட்டேன்.

சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஒரு உறுப்பினரின் பெயரைப் பரிந்துரைக்க விரும்பும் ஒவ்வொரு உறுப்பினரும், தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தப் பதவியில் பணியாற்ற அவர் தயாராக இருப்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

அவாலுடின் இதற்கு முன்னர் 2013 முதல் 2018 வரை அரச அவையின் சபாநாயகர் பதவியை வகித்தார்.

இந்த அமர்வில் 36 சட்டமன்ற உறுப்பினர்களில் 35 பேர் புதிய பதவிக் காலத்திற்கான மக்களின் பிரதிநிதிகளாகப் பதவியேற்றனர்.

இதனிடையே பாரோய் சட்டமன்ற உறுப்பினர் கமரோல் ரிட்ஸுவான் முகமது ஜைனை மாநில சட்டமன்றத்தின் துணை சபாநாயகராகவும் நியமிக்கப்பட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset