செய்திகள் மலேசியா
PKR கட்சிக்கு மீண்டும் திரும்புகிறார் முன்னாள் உதவித் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்
கோலாலம்பூர்:
PKR கட்சிக்கு மீண்டும் திரும்புகிறார் அக்கட்சியின் முன்னாள் உதவி தலைவராக இருந்த டாக்டர் சேவியர் ஜெயக்குமார்
டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான PKR கட்சியில் இணைவதை டாக்டர் சேவியர் ஜெயக்குமார் உறுதி செய்தார்.
கட்சியில் ஓரங்கட்டப்பட்ட மூத்த தலைவர்கள் மீண்டும் கட்சிக்கு வந்து சீர்த்திருத்த போராட்டத்தைத் தொடருமாறு அன்வார் கேட்டுக்கொண்டதை அடுத்து அவர் தற்போது PKR கட்சியில் இணைகிறார்.
கடந்த 2021ஆம் ஆண்டு PKR கட்சி எதிர்க்கட்சியாக இருந்தபோது டாக்டர் சேவியர் ஜெயக்குமார் அக்கட்சியிலிருந்து விலகினார்.
பின்னர் 2022-இல் 'பார்ட்டி பங்சா மலேசியா' (PBM) கட்சியில் இணைந்த அவர், அதற்கான காரணத்தை வெளிப்படுத்தவில்லை.
இதற்கிடையில், கட்சியின் மற்றொரு முன்னாள் உதவித் தலைவரான தியான் சுவாவும் மீண்டும் PKR கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாக 'சுவாரா கெஅடிலான்' செய்தி தளம் தெரிவித்துள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 17, 2026, 5:44 pm
பெர்கேசோவின் I-LINDUNG ஊடக விருதுகள் 2026: ஊடகங்கள், பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு
August 17, 2026, 5:02 pm
ஃபேஸ்புக்கில் மிரட்டல் விடுத்த ஆடவர் கைது: போலிஸ் நடவடிக்கை
August 17, 2026, 4:09 pm
சிப்பாங் F1 மடானி சிறப்பு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன
August 17, 2026, 3:52 pm
பகாங் மாநிலத்தின் கெந்திங் ஹைலண்டஸில் போதைப்பொருள் கும்பல் செயல்பாடா? போலிஸ் மறுப்பு
August 17, 2026, 3:38 pm
ஜாலூர் கெமிலாங் கொடியைத் தலைகீழாக பறக்கவிட்ட சம்பவம்: தொழிற்துறை வளாகம் தற்காலிகமாக மூடல்
August 17, 2026, 1:01 pm
