நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

வியட்நாமுக்கு எதிராக 200 சதவிகித செயல் திறனை வெளிப்படுத்த வேண்டும்: பவித்ரன்

கோலாலம்பூர்:

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 2026 ஆசியான் கிண்ண முதல் அரையிறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான வியட்நாமுக்கு அதிர்ச்சி அளிக்க வேண்டுமென்றால், ஹரிமாவ் மலாயா அணி களத்தில் 200 சதவிகித செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும்.

தேசிய அணியின் முன்னணி ஆட்டக்காரர் ஜி. பவித்ரன் இதனை கூறினார்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான விருப்பமான அணியாக வியட்நாம் அணி இருக்கும்.

மேலும் பல நட்சத்திர வீரர்கள் அந்த அணியில் வரிசையாக இருப்பதாலும் இது முக்கியம் என 21 வயதான இந்த இளம் நட்சத்திரம் விளக்கினார்.

இருப்பினும், வரும் புதன்கிழமை ஹனோயில் இரண்டாவது போட்டி நடைபெறுவதற்கு முன்பு, கோலாலம்பூர் கால்பந்து மைதானத்தில் ஹரிமாவ் மலாயா ஒரு கடுமையான போட்டியை அளிப்பதை உறுதி செய்வதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

வியட்நாமை எதிர்கொள்ள, நாம் கடினமாக உழைத்து நமது முழு உழைப்பையும் கொடுக்க வேண்டும்.

நாம் நூறு சதவிகிதம் உழைக்கவில்லை என்றாலோ அல்லது இந்தப் போட்டியை அலட்சியமாக எடுத்துக் கொண்டாலோ, வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset