நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அமித் ஷாவின் பிம்பம் எனும் "பலூன்" காற்றிறங்கி விட்டது: ராகுல் கிண்டல் 

புதுடெல்லி:

மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அமித் ஷா உத்தரவிட்டிருந்தால் அவர் குற்றவாளி என்றும், உத்தரவிடவில்லை என்றால் அவர் திறமையற்றவர் என்றும், எந்த நிலையிலும் அவர் பதவி விலக வேண்டும் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

அமித் ஷாவின் பிம்பம் எனும் "பலூன்" காற்றிறங்கி விட்டதாகவும், அதில் மீண்டும் காற்றை நிரப்பக் கடைசி முயற்சியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தோல்வியடைந்து "பலூன் வெடித்துவிட்டது". அமித் ஷாவுக்குத் துணிச்சல் இல்லை, அவரால் அவைக்கு வர முடியாது என்று ராகுல் குறிப்பிட்டார்.

மாணவர் போராட்டங்கள் உள்பட அனைத்து விவகாரங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக அமித் ஷா கூறியதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் இந்தக் கருத்துகள் வெளியாகின.

எதிர்க்கட்சிகள் இதுகுறித்து மக்களவை தலைவர் ஓம் பிர்லாவிடம் பிற்பகல் 2 மணிக்குள் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தால், இன்று பிற்பகல் 3 மணி முதல் நாளை பிற்பகல் 3 மணி வரை விவாதத்தை நடத்தலாம் என்று அவர் கூறினார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset