நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

விமானத்தின் அவசர கதவைத் திறக்க முயற்சி செய்த கேராளவைச் சேர்ந்த நபர் கைது 

கொச்சி: 

மலேசியாவிலிருந்து கேரளா, கொச்சிக்கு வந்த பயணி ஒருவர் விமானத்தில் நடுவானில் அவசரகால கதவை திறக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மலேசியாவிலிருந்து கேரளா மாநிலத்திற்கு பாத்தெக் ஏர் விமானம் இயக்கப்பட்டிருந்தது 

விமானம் பறந்து கொண்டிருந்தபோது அவசரகால வெளியேறும் கதவின் உள்புற ஜன்னல் பலகையை ஜாம்ஷீர் சேதப்படுத்தி, கதவை பலவந்தமாக திறக்க முயன்றதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து, விமான பணியாளர்கள் மற்றும் சக பயணியர் இணைந்து அவரை கட்டுப்படுத்தினர்.

சம்பவம் குறித்து, விமானத்தின் பாதுகாப்பு பொறுப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விமானம் நேற்று கொச்சி வந்ததும், அம்மாநில போலீசார் ஜாம்ஷீரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் வைரலானது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset