நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பாலியல் பலாத்கார வழக்கில் தெஹெல்கா நிறுவனர் குற்றவாளி எனத் தீர்ப்பு: பத்தாண்டு சிறை 

மும்பை:

தெஹெல்கா (Tehelka) சஞ்சிகையின் நிறுவனர் சக ஊழியரைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக இந்திய நீதிமன்றம் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துள்ளது.

63 வயது தருண் தெஜ்பால் (Tarun Tejpal) ஒரு நிகழ்ச்சியின்போது சக எழுத்தாளர் ஒருவரை மின்தூக்கியில் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

கோவா மாநிலத்தின் 5 நட்சத்திர ஹோட்டலில் அது நடந்ததாகத் தெரியவந்தது.

அந்தச் சம்பவம் 2013ஆம் ஆண்டு நவம்பரில் நடந்தது.

தருண் கைதுசெய்யப்பட்டார்; ஏழு மாதங்கள் சிறையில் இருந்தார்.

பின் உச்ச நீதிமன்றம் அவரைப் பிணையில் விடுவித்தது.

2021ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் தருணைக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தது.

ஆனால் அவரின் விடுதலையை எதிர்த்து கோவா அரசாங்கம் மீண்டும் வழக்கு தொடுத்துள்ளது.

நேற்று மும்பை உயர்நீதிமன்றத்தில் அவருக்குப் பத்தாண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset