நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கல்வி நிறுவனங்களில் பகடிவதை வழக்குகள் அதிகரிப்பு; சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியம்: டத்தோ குமார்

கோலாலம்பூர்:

கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சம்பந்தப்பட்ட பகடிவதை வழக்குகள் மிகவும் கவலையளிக்கும் வகையில் அதிகரித்துள்ளதாக புக்கிட் அமான் உறுதிப்படுத்தியுள்ளது.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ. எம் குமார் இந்தப் பிரச்சினை போலிசாரின்பொறுப்பு மட்டுமல்ல. சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவை என்று கூறினார்.

இது தொடர்பாக, குற்றம் மோசமடைவதற்கு முன்பே அதனைக் கட்டுப்படுத்த, சமூகம் தனது நடுநிலையான மனப்பான்மையைக் கைவிட்டு, மக்களின் பழக்கத்தைப் பின்பற்றத் தொடங்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

சமூகம் அக்கறை கொண்டு கவனமாக இருக்க வேண்டும்.

இங்குதான் நாம் ஒத்துழைப்பின் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த விஷயத்தில், அது சிறிதும் தவறல்ல.

இன்று இது நமக்குத் தெரியாத ஒரு குழந்தைக்கு நடக்கிறதுவ் நாளை நமக்குத் தெரிந்த ஒரு குழந்தைக்கு நடக்கலாம், மறுநாள் நம் சொந்த ரத்த உறவுகளே பாதிக்கப்பட்டவர்களாக இருக்கலாம்.

நடவடிக்கை எடுப்பதற்கு முன் அந்த நிலை வரும் வரை நாம் காத்திருக்க வேண்டுமா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset