செய்திகள் மலேசியா
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
சிப்பாங்:
அரசவை கழகத்தையும் அரசு குடும்பத்தைச் சிறுமைப்படுத்தும் வகையில் தவறான பதிவைப் போட்ட சமூக ஆர்வலர் ஒருவர் இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
கடந்த நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் ஸ்ரீ தஞ்சோங் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட இஸ்லா வஹ்யூடி ஜைனுடின், நீதிபதி அகமத் ஃபுவாத் ஒத்மான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது தாம் குற்றமற்றவர் என விசாரணைக் கோரினார்.
கடந்த ஜனவரி 14-ஆம் தேதி பிற்பகல் 3.20 மணியளவில் “randuk malaysia” என்ற இன்ஸ்டாகிராம் கணக்கின் மூலம் இழிவான கருத்துகளைப் பதிவேற்றியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சர்ச்சைக்குரிய பதிவு, ஜனவரி 24-ஆம் தேதி சைபர்ஜெயாவில் உள்ள மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக் ஆணையத்தின் (MCMC) தலைமையகத்தில் பார்க்கப்பட்டது.
1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடக் சட்டத்தின் 233(1)(a) பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டு, அதே சட்டத்தின் 233(2) பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ரிங்கிட் 500,000 அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த வழக்கின் மறுவிசாரணையை நீதிமன்றம் வரும் செப்டம்பர் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 5:28 pm
போட்டித்தன்மையை தக்கவைத்துக் கொள்ள மலேசியா மனித மூலதனத்தை வலுப்படுத்த வேண்டும்: டத்தோஶ்ரீ இக்பால்
August 11, 2026, 5:27 pm
கல்வி நிறுவனங்களில் பகடிவதை வழக்குகள் அதிகரிப்பு; சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியம்: டத்தோ குமார்
August 11, 2026, 4:09 pm
பிரதமர் விரைவில் குணமடைய மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: ஜாஹித்
August 11, 2026, 4:08 pm
தாபோங் ஹாஜி தடயவியல் தணிக்கை அறிக்கை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்: மொஹைதின்
August 11, 2026, 3:10 pm
