செய்திகள் மலேசியா
1 எம்டிபி: டானோர் ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு 620 மில்லியன் அமெரிக்க டாலரைத் திருப்பித் தர உத்தரவிட்ட எரிக் டான்
புத்ராஜெயா:
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் 2013இல் பணம் அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பிய 620 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி, அவரது வங்கிக் கணக்கில் மீண்டும் வரவு வைக்கப்படவில்லை.
வெளிநாட்டுச் சொத்து மீட்பு நிபுணர் ஒருவர் இன்று இங்குள்ள உயர் நீதிமன்றத்தில் இதனை தெரிவித்தார்.
1 எம்டிபியின் மூன்றாவது சாட்சியான ஏஞ்சலா பார்க்ஹவுஸ், நஜிப்பின் வழக்கறிஞர் டான் ஸ்ரீ முஹம்மது ஷாஃபி அப்துல்லாவின் கருத்தை ஏற்றுக்கொண்டார்.
அதாவது, அந்தப் பணத்தை அனுப்பிய தரப்பாக அவர் குறிப்பிட்ட டானோர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனுக்கே அந்த நிதி திருப்பி அனுப்பப்பட்டது என்ற கருத்தை அவர் ஒப்புக் கொண்டார்.
க்ரோல் (கேமன்) லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், க்ரோலின் வெளிநாட்டுச் செயல்பாட்டுப் பிரிவின் தலைவராகவும் இருக்கும் பார்க்ஹவுஸிடம், 2013இல் நடந்த 13ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு அந்த நிதி திருப்பித் தரப்பட்டதா என்று முஹம்மது ஷாபி கேள்வி எழுப்பினார்.
ஆனால், அந்தக் காலக்கட்டத்தை தன்னால் உறுதிப்படுத்த முடியாது என்று பார்க்ஹவுஸ் பதிலளித்தார்.
பின்னர் அந்த வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் 681 மில்லியன் அமெரிக்க டாலரில் பயன்படுத்தப்படாத நன்கொடையான 620 மில்லியன் அமெரிக்க டாலரைத் திருப்பிக் கொடுத்துவிட்டதாகவும், ஏனெனில் அவ்வளவு பெரிய தொகையைத் தனது வங்கிக் கணக்கில் வைத்திருப்பது அவருக்கு அசௌகரியமாக இருந்ததாகவும் சாட்சியிடம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 5:28 pm
போட்டித்தன்மையை தக்கவைத்துக் கொள்ள மலேசியா மனித மூலதனத்தை வலுப்படுத்த வேண்டும்: டத்தோஶ்ரீ இக்பால்
August 11, 2026, 5:27 pm
கல்வி நிறுவனங்களில் பகடிவதை வழக்குகள் அதிகரிப்பு; சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியம்: டத்தோ குமார்
August 11, 2026, 4:09 pm
பிரதமர் விரைவில் குணமடைய மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: ஜாஹித்
August 11, 2026, 4:08 pm
தாபோங் ஹாஜி தடயவியல் தணிக்கை அறிக்கை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்: மொஹைதின்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
