நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாபோங் ஹாஜி தடயவியல் தணிக்கை அறிக்கை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்: மொஹைதின்

கோலாலம்பூர்:

தாபோங் ஹாஜியின் சொத்து மதிப்பில் கடுமையான சரிவை ஏற்படுத்திய முதலீட்டு முடிவுகளை ஆய்வு செய்வதற்காக, ஒரு விரிவான, தொடர்ச்சியான தடயவியல் தணிக்கை உடனடியாகச் செயல்படுத்தப்பட்டு ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்.

இந்த முன்மொழிவை பாகோ நாடாளுமன்ற உறுப்பினர்  டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் முன்வைத்தார்.

மேலும், நிதிப் பரிமாற்றத்தைக் கண்காணிக்கவும், ஏற்படக்கூடிய மோசடி, அதிகார துஷ்பிரயோகம், அலட்சியம் போன்ற கூறுகளைக் கண்டறியவும் சுதந்திரமான தடயவியல் தணிக்கை செயல்முறை மிகவும் முக்கியமானது.

தாபோங் ஹாஜி நிதிகளின் நிர்வாகத்தில் மிகவும் சிக்கலான நிர்வாக பலவீனங்களும் கசிவுகளும் இருப்பதால், ஒரு விரிவான, தொடர்ச்சியான தடயவியல் தணிக்கை உடனடியாகச் செயல்படுத்தப்பட்டு ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்.

மோசடி, அதிகார துஷ்பிரயோகம் அல்லது அலட்சியம் ஆகியவற்றின் மூலம் தாபோங் ஹாஜி  நிதிகளுக்கு இழப்புகளை ஏற்படுத்திய எவரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

இன்று நாடாளுமன்றத்தில் தாபோங் ஹாஜி அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை தொடர்பான மக்களவை சிறப்புக் கூட்டத்தின் விவாத அமர்வில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset