செய்திகள் மலேசியா
பெர்சத்து இன்னும் தேசியக் கூட்டணியின் சட்டப்பூர்வமான உறுப்பு கட்சியாக்கும்; ஆர்ஓஎஸ்க்கு மேல்முறையீடு செய்யப்படும்: அஸ்மின் அலி
கோலாலம்பூர்:
பெர்சத்து கட்சி இன்னும் தேசியக் கூட்டணியின் சட்டப்பூர்வமான உறுப்பினராகும்.
அக்கூட்டணியில் தங்களின் உறுப்பினர் பதவி தானாகவே நீக்கப்படும் என்று பாஸ் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் கூறியது கட்சியின் அரசியலமைப்பிற்கு முரணானது.
ஒரு உறுப்பினர் கூட்டணியின் உறுப்பினர் பதவியை அதுவாகவே நீக்குவதற்கு தேசியக் கூட்டணியின் சட்ட விதியில் எந்தப் பிரிவும் இல்லை என்று பெர்சத்து பொதுச்செயலாளர் டத்தோஶ்ரீ முகமது அஸ்மின் அலி கூறினார்.
தேசியக் கூட்டணியின் சட்ட விதியின் பிரிவு 7ஏ-இன் படி, ஒரு உறுப்பினர் கட்சியின் நிலை ஜனாதிபதி சபையின் முடிவின் மூலம் மட்டுமே இறுதி செய்யப்பட முடியும் என்று அவர் கூறினார்.
இன்றுவரை, தேசியக் கூட்டணியில் பெர்சத்துவின் உறுப்பினர் பதவியைத் தீர்மானிக்க தலைவர்கள் சபை ஒருபோதும் கூடவில்லை.
எனவே, பெர்சத்து இன்னும் ஒரு சட்டப்பூர்வமான தேசியக் கூட்டணி உறுப்பினர் கட்சியாகும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 7, 2026, 5:23 pm
போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கேஎல்ஐஏவில் போலிஸ் பாதுகாப்பை பலப்படுத்தும்: ஹுசைன் ஒமார் கான்
August 7, 2026, 5:22 pm
கெஅடிலான் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா விலகியதை டத்தோஶ்ரீ அன்வார் வரவேற்றார்
August 7, 2026, 5:19 pm
இஸ்மாயில் சப்ரி கீழே விழுந்த இரண்டு விநாடிகளில் அவரது இதயம் நின்றுவிட்டது: வழக்கறிஞர்
August 7, 2026, 5:18 pm
இரண்டாவது சிலாங்கூர் திட்டம்: 5 முக்கியத் துறைகள் மூலம் மாநிலப் பொருளாதாரத்தை உயர்த்த இலக்கு
August 7, 2026, 4:08 pm
நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி யூசோஃப் சின் வயது மூப்பு காரணமாக காலமானார்
August 7, 2026, 3:06 pm
