நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி யூசோஃப் சின் வயது மூப்பு காரணமாக காலமானார் 

கோலாலம்பூர்: 

நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி யூசோஃப் சின் வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலையில் காலமானார். அவருக்கு வயது 91 

அவர் காலமான செய்தியை முன்னாள் வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் எஸ்ரி அப்துல் வஹாப் உறுதிப்படுத்தினார். 

இன்று அதிகாலை 1 மணிக்குத் தனது தந்தை உயிரிழந்ததாக ஸுலியானா தெரிவித்தார் என்று எஸ்ரி குறுந்தகவல் மூலம் தெரிவித்திருந்தார். 

மறைந்தவரின் உடல் கோத்தா டமான்சாராவில் உள்ள பிரிவு 9 இஸ்லாமிய மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, கெலானா ஜெயாவில் உள்ள அல்-ஹிதாயா மசூதியில் இறுதித் தொழுகைகள் நடைபெறும்.

கடந்த 1994 முதல் 2000 வரை நாட்டின் தலைமை நீதிபதியாக யூசோஃப் சின் பொறுப்பு வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset