நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அலோர் காஜாவில் மதிய உணவு, வெள்ளிக்கிழமை தொழுகை: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்துகொண்டார் 

அலோர் காஜா: 

மலாக்கா, அலோர் காஜாவில் உள்ள சுல்தான் சலாய் உணவகத்தில் உணவு உட்கொண்டு, வெள்ளிக்கிழமை தொழுகையிலும் ஈடுபட்டார் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் 

மதியம் 12.30 மணிக்கு அங்கு வந்த டத்தோஶ்ரீ அன்வாரை மலேசிய உயர்க்கல்வி அமைச்சின் துணையமைச்சரும் ஹங் துவா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினருமான அடாம் அட்லி அப்துல் ஹலிம் வரவேற்றார் 

மேலும், மலாக்கா மாநில போலிஸ் தலைவருமான டத்தோ சுல்கைரி முக்தார் கலந்து சிறப்பித்தார். 

அதன்பிறகு அன்வர், 100க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள், உணவக ஊழியர்களுடன் கலந்துரையாடி நேரத்தைச் செலவிட்டார்.

அதன்பிறகு, டத்தோஶ்ரீ அன்வார்  சுங்கை உடாங்கில் நடைபெறவிருந்த அடுத்த நிகழ்ச்சியைத் தொடரப் புறப்பட்டார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset