நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பலோன் டி ஓர் விருதை வெல்ல ஒன்பது ஆட்டக்காரர்களுக்கு தகுதியுள்ளது

லண்டன்:

உலகக் கிண்ண கால்பந்து போட்டி முடிவடைந்துள்ள நிலையில், கால்பந்தின் மிகவும் மதிப்புமிக்க தனிநபர் விருதான பலோன் டி ஓர் மீது தங்கள் கவனத்தைத் திருப்பும் நட்சத்திரங்களில் ஹாரி கேன், லியோனல் மெஸ்ஸி, லாமின் யமால் ஆகியோரும் அடங்குவர்.

இந்தப் போட்டியில் பல நட்சத்திரங்களின் செயல்பாடுகள், இந்த கௌரவத்திற்கான அவர்களின் தகுதியை உறுதிப்படுத்தியுள்ளன. 

மேலும், தங்கள் நாட்டின் வெற்றியில் முக்கியப் பங்காற்றிய பல ஸ்பெயின் வீரர்கள், இறுதிப் பட்டியலில் முன்னேறியுள்ளனர்.

பலோன் டி ஓர் வெற்றியாளர் அக்டோபர் 26 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்.

மீண்டும் வெற்றியாளர்கள் வருவார்களா அல்லது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வெற்றியாளர் பட்டியலில் புதிய பெயர்கள் இடம்பெறுமா? என்ற கேள்விகள் பரவலாக எழுந்துள்ளது.

கிட்டத்தட்ட 9 ஆட்டக்காரர்கள் இவ்விருதை வெல்ல தகுதியானவர் என கணிக்கப்பட்டுள்ளது.

இதில் லியோனல் மெஸ்ஸி, ஹாரி கேன், லாமின் யமால், ரோட்ரி, கிளையன் எம்பாப்பே, ஓஸ்மனே டெம்பிள், ஜூட் பெலிங்கம், பாவ் குபார்சி, ஃபேபியன் ரூயிஸ் ஆகியோருக்கு இடையே விருதை கடும் போட்டி நிலவுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset