நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு: சிங்கப்பூரில் 7.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது

சிங்கப்பூர்: 

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் சிங்கப்பூரில ்7.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. 

மூன்றில் ஒரு பங்கு சிங்கப்பூர் நாட்டின் ஏற்றுமதி இதனால் பாதிக்கப்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் நாட்டின் வர்த்தக அமைச்சர் கன் கிம் யோங் கூறினார். 

1974 அமெரிக்க வர்த்தக சட்டத்தின் செக்‌ஷன் 301இன் கீழ் இந்த புதிய வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

ஒளியியல் கருவிகள் மற்றும் இரசாயனப் பொருட்கள் உட்பட, சிங்கப்பூரின் ஏற்றுமதிகளில் சுமார் மூன்றில் ஒரு பங்கைப் பாதிக்கிறது.
 
கட்டாய உழைப்பை உள்ளடக்கிய பொருட்கள் வர்த்தகத்தில் சிங்கப்பூர் ஈடுபட்டுள்ளது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 24ஆம் தேதி அமெரிக்கா சிங்கப்பூர் நாட்டிற்கு 12.5 விழுக்காடு புதிய வரி விதிப்பை அமல்படுத்தியது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset