செய்திகள் உலகம்
ஏர் இந்தியா விமானம் காற்று கொந்தளிப்பில் கடுமையாக குலுங்கியதில் 17 விமான பயணிகள் பாதிப்பு
புதுடெல்லி:
தாய்லாந்து நாட்டின் புக்கெட்டிலிருந்து இந்தியாவின் புதுடெல்லி நோக்கி புறப்பட்ட AI2379 ஏர் இந்தியா ரக விமானம் கடுமையான காற்று கொந்தளிப்பில் சிக்கியது.
இந்த சம்பவத்தை அடுத்து விமானம் வேகமாக குலுங்கிய வேளையில் விமான பயணத்தில் இருந்த 17 பயணிகள் பலத்த காயங்களுக்கு இலக்கானதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இருப்பினும், விமானம் டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானம் சுமார் 300 அடி உயரத்தை திடீரென இழந்ததாக கூறப்படுகிறது. இந்த அதிர்வால் சில பயணிகள் மற்றும் விமானப் பணிப்பெண்கள் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களுக்கு தரையிறங்கிய உடனேயே மருத்துவ உதவி அளிக்கப்பட்டு, சிலர் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 11:11 am
வெனிசுவேலாவில் நிகழ்ந்த இரட்டை நிலநடுக்கங்கள்: பலி எண்ணிக்கை 6,301ஆக உயர்வு
August 10, 2026, 3:37 pm
பிரம்மாண்டமாக நடந்த சிங்கப்பூரின் 61ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்
August 9, 2026, 4:24 pm
சிங்கப்பூர் தேசிய தின விருதுகள் 7,491 பேருக்கு வழங்கப்படுகின்றன
August 9, 2026, 1:21 pm
அமெரிக்க செனட் சபையில் மசோதா நிறைவேற்றம்: இந்திய பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்
August 6, 2026, 3:06 pm
இஸ்ரேல் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 112 பேரின் உடல்களுக்கு கூட்டு இறுதிச் சடங்கு
August 6, 2026, 10:52 am
