நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

டிரம்ப் கோல்ஃப் திடலில் ஆயுதம் ஏந்திய நபர் கைது செய்யப்பட்டார் 

லாஸ் ஏஞ்சல்ஸ்: 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்குச் சொந்தமான கோல்ஃப் திடலில் ஆயுதம் ஏந்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அதிபர் டிரம்ப்  அந்த இடத்திற்கு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆயுதம் ஏந்திய நபர் ஒருவர் இருந்த நிலையில் பாதுகாப்பு கருதி கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஜியநைன் ஜான் என்று அடையாளம் காணப்பட்டார். 

அவர் சந்தேகத்திற்குரிய வகையில் அதிபர் டிரம்ப்பின் கோல்ஃப் திடலில் நடந்து கொண்டு புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் எடுத்து கொண்டிருந்ததாக லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தின் காவல்துறை தரப்பு தெரிவித்தது. 

தேடுதல் முடிவுகளில், தாக்குதல் ரகத் துப்பாக்கி ஒன்று, ஒரு கைத்துப்பாக்கி, குண்டு துளைக்காத கவசம், அதிக கொள்ளளவு கொண்ட தோட்டா உறைகள், தோட்டாக்கள், இரண்டு ரேடியோக்கள் மற்றும் "அதிர்ச்சியூட்டும் கூற்றுகளைக் கொண்ட பல குறிப்பேடுகள்" கண்டெடுக்கப்பட்டன.

2024 தேர்தல் பிரச்சாரம் முதல் டிரம்ப் மீது பல கொலை முயற்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset