நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒரு கோடியே 42 லட்சத்திற்கும் அதிகமானோர் புடி மடானி ரோன்95 திட்டத்தின் வழி பயன் பெறுகின்றனர்: டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா

புத்ரா ஜெயா:

தகுதிபெற்ற ஒரு கோடியே 16 லட்சம் பேரில் ஒரு கோடியே 42 லட்சத்திற்கும் அதிகமானோர் புடி மடானி ரோன்95 திட்டத்தின் வழி பயனடைந்துள்ளனர்.

இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு 1,340 கோடி லிட்டருக்கும் அதிகமான பெட்ரோல் எரிபொருள் பயன்படுத்தப்பட்டதாக இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.

''2025-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2026-ஆம் ஆண்டு ஜூன் வரையில் உண்மையான புடி95 பயன்பாட்டுத் தரவுகளின் அடிப்படையில், புடி95 பயனர்களில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே தொடர்ந்து 200 லிட்டருக்கும் அதிகமான ரோன்95-ஐப் பயன்படுத்துகின்றனர்'', என்றார் அவர்.

ரோன்95-க்கு இலக்கிடப்பட்ட உதவித் தொகையை அமல்படுத்துவதால் ஏற்படும் வருடாந்திர சேமிப்பின் விளைவுகள் குறித்து செனட்டர் டத்தோ பொப்பெய் அஹ் ஃபாங் பின் சுவான் எழுப்பிய கேள்விக்கு அமிர் ஹம்சா அவ்வாறு பதிலளித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset