செய்திகள் உலகம்
ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திடீர் அறிவிப்பு
வாஷிங்டன்:
மத்திய கிழக்கு நாடுகளின் கோரிக்கையை ஏற்று ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்படுகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப்.28-ம் தேதி போர் தொடங்கியது. கடந்த ஏப்.8-ம் தேதி இருதரப்பு இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
ஜூன் 17-ஆம் தேதி இரு நாடுகள் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், ஹார்முஸ் ஜலசந்தியில் சென்ற சில சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதன்காரணமாக கடந்த ஜூலை 13-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதலை தொடங்கியது. ஈரானின் ராணுவ தளங்கள், ஆயுத உற்பத்தி ஆலைகள், ஆயுதக் கிடங்குகள், உள்கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் அதிதீவிர தாக்குதல்களை நடத்தியது.
இதற்கு பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, குவைத், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ராணுவம் ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் தீவிர தாக்குதல்களை நடத்தியது.
சமீபத்தில் கிடைத்த தகவலின்படி ஈரான் அனுப்பும் ஏவுகணைகளை மறித்து அழிக்கும் ரேடார் தடுப்பான்கள் இல்லாமல் அமெரிக்கா தவித்து வருகிறது. இருப்பு குறைந்துவிட்டதால் வேறு வழியில்லாமல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 3, 2026, 6:50 am
இலங்கை சிறையில் மீண்டும் கலவரம்: கைதி மாண்டார்
August 2, 2026, 10:57 am
பாகிஸ்தானில் பனிச்சரிவு: பிரபல மலையேறி நிர்மல் புர்ஜா உள்பட 10 பேர் மரணம்
July 31, 2026, 11:44 am
சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 51ஆக அதிகரிப்பு, 10 பேர் காணவில்லை
July 30, 2026, 10:08 pm
டெலிகிராம் CEO சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக ரஷ்யா அதிரடியாக அறிவித்தது
July 30, 2026, 10:47 am
அர்ஜெண்டினாவில் தீயணைப்பு ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது: எழுவர் பலி
July 28, 2026, 5:22 pm
சவூதி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ட்ரோன் தாக்குதல்: பெரும் தீ விபத்து
July 28, 2026, 11:39 am
