செய்திகள் உலகம்
இலங்கை சிறையில் மீண்டும் கலவரம்: கைதி மாண்டார்
கொழும்பு:
தலைநகர் கொழும்பு அருகே மஹர சிறைச்சாலையில் (Mahara Prison) நேற்று கைதிகள் பல கட்டடங்களைச் சேதப்படுத்தினர்.
கலவரத்தில் ஒரு கைதி மாண்டார், மேலும் ஆறு பேர் காயமுற்றனர்.
இலங்கை அரசாங்கம் சிறைக் கலவரத்தைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களையும் மின்னல்படை வீரர்களையும் அனுப்பியிருக்கிறது.
ராணுவமும் சிறப்புப் படையும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாகக் காவல்துறை கூறியது.
கடந்த மாதம் மற்றொரு சிறையில் ஏற்பட்ட கலகத்தில் 21 கைதிகளும் 10 காவலர்களும் மாண்டனர்.
நேற்று கலகம் மூண்ட மஹர சிறையில் நாலாயிரத்துக்கும் அதிகமான கைதிகள் உள்ளனர். கூட்டநெரிசல் அதிகம் என்று சொல்லப்பட்டது.
சமையலறை, மருத்துவமனை, புதிதாகக் கட்டப்பட்ட மறுவாழ்வுக் கட்டடம், பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றைக் கைதிகள் முற்றாகச் சிதைத்துவிட்டதாகக் காவல்துறை கூறியது.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
August 3, 2026, 12:27 pm
ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திடீர் அறிவிப்பு
August 2, 2026, 10:57 am
பாகிஸ்தானில் பனிச்சரிவு: பிரபல மலையேறி நிர்மல் புர்ஜா உள்பட 10 பேர் மரணம்
July 31, 2026, 11:44 am
சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 51ஆக அதிகரிப்பு, 10 பேர் காணவில்லை
July 30, 2026, 10:08 pm
டெலிகிராம் CEO சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக ரஷ்யா அதிரடியாக அறிவித்தது
July 30, 2026, 10:47 am
அர்ஜெண்டினாவில் தீயணைப்பு ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது: எழுவர் பலி
July 28, 2026, 5:22 pm
சவூதி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ட்ரோன் தாக்குதல்: பெரும் தீ விபத்து
July 28, 2026, 11:39 am
