நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தனது தலைமையிலான மடானி அரசாங்கம் நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும்: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் திட்டவட்டம் 

சிரம்பான்: 

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில தேர்தலில் BN-PN கூட்டணி வெற்றிப்பெற்று அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்கவிருக்கிறது. 

இவ்வேளையில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளார். 

மேலும், தனது தலைமையிலான மடானி அரசாங்கம் நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று PH தலைவருமான அன்வார் சொன்னார். 

நெகிரி செம்பிலானின் முன்னேற்றத்திற்காக, ஆட்சி மற்றும் மேம்பாட்டில் கூட்டணியின் பாரம்பரியம் வரவிருக்கும் நிர்வாகத்தால் வலுப்படுத்தப்படும் என்று PH தலைவர் அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார்.

கூட்டரசு  அரசாங்கம், பதவியேற்கவிருக்கும் நெகிரி செம்பிலான் அரசாங்கத்திற்குத் தொடர்ந்து ஆதரவளித்து ஒத்துழைக்கும் என்று அவர் குறிப்பிட்டார். 

நெகிரி செம்பிலான் மாநில தேர்தலில் தேசிய முன்னணி - தேசிய கூட்டணி இணைந்து 25 சட்டமன்ற இடங்களை வெற்றிக்கொண்டன .

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset