செய்திகள் உலகம்
சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 51ஆக அதிகரிப்பு, 10 பேர் காணவில்லை
பெய்ஜிங்:
தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51ஆக உயர்ந்தது.
மேலும் 10 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
கடந்த ஜூலை 17ஆம் தேதி பெங்சுய் கவுண்டி, சோங்கிங்கில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் குடியிருப்பு பகுதிகள், மலையடிவாரத்திலும் ஆற்றங்கரையோரத்திலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இதுவரை 51 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. அவர்களில் அனைவரும் மாண்டுவிட்டனர். இருப்பினும் இன்னும் 10 பேர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
325 மணி நேரம் நீடித்த இந்த மீட்புப் பணியின்போது, மீட்புக் குழுவினர் பிரம்மாண்டமான பாறாங்கற்கள், உயர வேறுபாடுகள், குறுகிய இடங்கள் மற்றும் அதிக வெப்பநிலை உள்ளிட்ட கடுமையான சவால்களை எதிர்கொண்டனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 11:11 am
வெனிசுவேலாவில் நிகழ்ந்த இரட்டை நிலநடுக்கங்கள்: பலி எண்ணிக்கை 6,301ஆக உயர்வு
August 10, 2026, 3:37 pm
பிரம்மாண்டமாக நடந்த சிங்கப்பூரின் 61ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்
August 9, 2026, 4:24 pm
சிங்கப்பூர் தேசிய தின விருதுகள் 7,491 பேருக்கு வழங்கப்படுகின்றன
August 9, 2026, 1:21 pm
அமெரிக்க செனட் சபையில் மசோதா நிறைவேற்றம்: இந்திய பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்
August 6, 2026, 3:06 pm
இஸ்ரேல் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 112 பேரின் உடல்களுக்கு கூட்டு இறுதிச் சடங்கு
August 6, 2026, 10:52 am
வகுப்பறையில் ஆசிரியர் முன் மாணவன் புகைப்பிடித்த சம்பவம்
August 5, 2026, 2:51 pm
