செய்திகள் உலகம்
டெலிகிராம் CEO சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக ரஷ்யா அதிரடியாக அறிவித்தது
மாஸ்கோ:
தீவிரவாதத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் காரணமாக டெலிகிராம் மெசஞ்சர் சிஇஓ பவெல் துரோவை தேடப்படும் குற்றவாளி என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ரஷ்யாவின் பிரதான உள்நாட்டு பாதுகாப்பு முகமை கூறியதாவது:
ரஷ்யாவில் சைபர் மோசடி, கூட்டுப் படுகொலை, தீவிரவாதம், பல்வேறு நாசவேலைகளை திட்டமிடும் உக்ரைன் உளவுத்துறை, தீவிரவாத அமைப்புகள் திட்டமிடவும், அதை அரங்கேற்றவும் டெலிகிராம் தளத்தை பயன்படுத்துகிறது.
அப்படி டெலிகிராமில் ஆக்டிவாக உள்ள சேனல்கள், சாட்களை அந்நிறுவனம் நீக்க தவறியது. அதனால் தீவிரவாதத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் டெலிகிராம் மெசஞ்சர் சிஇஓ பவெல் துரோவை தேடப்படும் குற்றவாளி என்று ரஷ்யா அதிரடியாக அறிவித்துள்ளது.
ரஷ்யாவில் டெலிகிராம் செயலி தடை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, தன் மீது ரஷ்யா கிரிமினல் விசாரணையை தொடங்கியதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் பவெல் துரோவ் கூறியிருந்தார்.
தங்களது டெலிகிராம் செயலியை தடை செய்ய இந்த குற்றச்சாட்டு ஜோடிக்கபப்ட்டதாகவும், கருத்து சுதந்திரம், பிரைவசி உரிமைகள் நசுக்கப்படுவதாகவும் அவர் குற்றச்சாட்டு வைத்தார்.
இந்நிலையில், அவரை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளி என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
41 வயதான அவர், ரஷ்ய நாட்டை சேர்ந்தவர். அவரது டெலிகிராம் தளம் அந்நாட்டில் மிகவும் பிரபலம். அதிகளவிலான மக்கள் அதனை அங்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அந்த தளம் அங்கு தடை செய்யப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 11:11 am
வெனிசுவேலாவில் நிகழ்ந்த இரட்டை நிலநடுக்கங்கள்: பலி எண்ணிக்கை 6,301ஆக உயர்வு
August 10, 2026, 3:37 pm
பிரம்மாண்டமாக நடந்த சிங்கப்பூரின் 61ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்
August 9, 2026, 4:24 pm
சிங்கப்பூர் தேசிய தின விருதுகள் 7,491 பேருக்கு வழங்கப்படுகின்றன
August 9, 2026, 1:21 pm
அமெரிக்க செனட் சபையில் மசோதா நிறைவேற்றம்: இந்திய பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்
August 6, 2026, 3:06 pm
இஸ்ரேல் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 112 பேரின் உடல்களுக்கு கூட்டு இறுதிச் சடங்கு
August 6, 2026, 10:52 am
வகுப்பறையில் ஆசிரியர் முன் மாணவன் புகைப்பிடித்த சம்பவம்
August 5, 2026, 2:51 pm
