நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தபோங் ஹாஜியின் அரச விசாரணை அறிக்கை RCI- ஐ விவாதிக்க ஆகஸ்ட் 11ஆம் தேதி சிறப்பு மக்களவை கூட்டம்  

கோலாலம்பூர்: 

தபோங் ஹாஜியை உட்படுத்திய RCI எனப்படும் அரச விசாரணை அறிக்கை தொடர்பாக சிறப்பு மக்களவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் 

இந்த சிறப்பு மக்களவை கூட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

இந்த விவகாரம் தொடர்பாக தாம் மக்களவை சபாநாயகர் டான்ஶ்ரீ ஜொஹாரி அப்துல் அவர்களிடம் பேசிவிட்டதாகவும் சிறப்பு மக்களவை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி விவாதங்கள் முடிவும் வரை கூட்டம் நடைபெறும் என்று அன்வார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

கடந்த 2014 முதல் 2020ஆம் ஆண்டு வரை தபோங் ஹாஜியில் ஏற்பட்ட நிர்வாக சிக்கல் மற்றும் பண கையாடல் குறித்து 2021ஆம் ஆண்டு RCI விசாரணை தொடங்கப்பட்டது. 

நேற்று அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, அரச விசாரணை அறிக்கை பொதுவில் வெளியிட அரசாங்கம் முடிவு செய்தது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset