செய்திகள் மலேசியா
விளையாட்டு எல்லைகளைக் கடந்து மக்களை ஒன்றிணைக்கிறது: பெர்லிஸ் மாநில ஆட்சியாளர் தகவல்
கங்கார்:
விளையாட்டு என்பது வெறும் பதக்கங்களை மட்டும் வெல்வது அல்ல; மாறாக, எல்லைகளைக் கடந்து மக்களை விளையாட்டு ஒன்றிணைக்கிறது என்று பெர்லிஸ் மாநில ஆட்சியாளர் துவாங்கு சையத் சிராஜுடின் ஜமாலுலாய் கூறினார்.
எல்லைகள், கலாச்சாரங்கள் மற்றும் மொழிகளைக் கடந்து சமூகங்களை ஒன்றிணைக்கும் தனித்துவமான ஆற்றல் விளையாட்டுகளுக்கு உண்டு என்று ராஜா பெர்லிஸ் தெரிவித்தார்.
விளையாட்டுகள், போட்டிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் நாடுகளிடையே நட்பு, புரிதல் மற்றும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துகின்றன
நேற்று இரவு 2020 அரங்கில் நடைபெற்ற 10வது வுட்பால் உலகக் கோப்பை மற்றும் 26வது மலேசிய சர்வதேச திறந்தநிலை வுட்பால் சாம்பியன்ஷிப் போட்டிகளின் நிறைவு விழாவைத் தொடங்கி வைத்துப் பேசியபோது, துவாங்கு சையத் சிராஜுதீன் இவ்வாறு கூறினார்.
இரண்டு போட்டிகளிலும் மலேசியா ஏழு தங்கப் பதக்கங்களையும், 12 வெள்ளிப் பதக்கங்களையும், ஒன்பது வெண்கலப் பதக்கங்களையும் வென்றது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 30, 2026, 8:58 pm
மடானி அரசின் திட்டங்களால் இந்திய சமூகம் தொடர்ந்து பயனடைந்து வருகிறது: டத்தோஸ்ரீ ரமணன்
July 30, 2026, 5:49 pm
இளம் பெண் உயிர்களை பறித்த விபத்து: ஓட்டுநர் மீது கொலை வழக்கு பாய்ந்தது
July 30, 2026, 5:17 pm
இரு மாணவிகளைக் கொலை செய்த சம்பவம்: வாகன ஓட்டுநர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
July 30, 2026, 5:13 pm
ஜொகூர் பாருவில் டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன
July 30, 2026, 4:43 pm
