நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இரு மாணவிகளைக் கொலை செய்த சம்பவம்: வாகன ஓட்டுநர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார் 

தெலுக் இந்தான் - 

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரு மாணவிகளைக் கொலை செய்தது உட்பட நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள வாகன ஓட்டுநர் ஒருவர் இன்று இங்குள்ள தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார் 

இரு குற்றங்கள் யாவும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட வேளையில் மற்ற இரு குற்றங்களும் 1987 சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது. 

நீதிபதி நய்டாத்துள் அதிரா அஸ்மான் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது குற்றஞ்சாட்டப்பட்ட 28 வயதான அலெக்ஸ் ரொபெர்ட் தனக்கு புரிந்ததாக தலையை மட்டும் அசைத்தார். 

கடந்த ஜூலை 26ஆம் தேதி மாலை 6.35 மணிக்கு நூர் Nur Dania Arissa Salim மற்றும் Nur Atikah Abdullah இருவரையும் கொலை செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டது 

இந்த வழக்கு உயர்நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்டதால் எந்தவொரு ஒப்புதல் வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை 

மற்றொரு குற்றச்சாட்டில் குற்றஞ்சாட்டப்பட்டவர் போதையில் வாகனத்தை செலுத்தி பாதசாரி ஒருவரை காயம் விளைவித்ததாக தெரிவிக்கப்பட்டது. 

அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் தேதியாக செப்டம்பர் 11-ஐ நீதிமன்றம் நிர்ணயித்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset