 
 செய்திகள் இந்தியா
உ.பி.: உன்னாவ் பாலியல் சம்பவத்தில் உயிரிழந்த சிறுமியின் தாய் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டி
புது டெல்லி:
உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 50 பெண்கள் உள்பட 125 பேர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.
உன்னாவ் தொகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமியின் தாய்க்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் வரும் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.
இதையொட்டி, 50 பெண்கள் உள்பட 125 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ள முதல் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில் உன்னாவ் தொகுதியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமியின் தாய் ஆஷா சிங்குக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மத்திய லக்னௌ தொகுதி வேட்பாளராக சிஏஏ போராட்ட செயற்பாட்டாளரும் காங்கிரஸ் மாநில செய்தித் தொடர்பாளருமான சதஃப் ஜாபர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சமுதாய சுகாதார சேவைப் பணியாளர்களின் நலனுக்காக போராடிவரும் பூனம் பாண்டே ஷாஜஹான்பூர் வேட்பாளராகவும், பழங்குடியின மக்களுக்காக குரல் எழுப்பிவரும் பழங்குடியினத் தலைவர் ராம்ராஜ் கோன்ட், போங்கா தொகுதியிலும் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் அஜய்குமார் லல்லு தம்குஹிராஜ் தொகுதியிலும், சட்டப் பேரவைக் குழு காங்கிரஸ் தலைவர் ஆராதனா மிஸ்ரா மோனா, ராம்பூர் காஸ் தொகுதியிலும் முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் மனைவி லூயிஸ் குர்ஷித் பரூகாபாத் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
October 31, 2025, 11:58 am
உங்கள் வங்கிக் கணக்கில் 'இதை' அப்டேட் செய்துவிட்டீர்களா?: நாளை முதல் இந்தியாவில் இது கட்டாயம்
October 29, 2025, 7:23 am
இந்தியாவில் எரிசக்தி உற்பத்தி அதிகரித்து வருவதால் 2030ஆம் ஆண்டுக்குள் நிலக்கரி மின்சாரம் உச்சமடையும்
October 27, 2025, 9:31 pm
5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிலிருந்து சீனாவுக்கு விமான சேவை
October 25, 2025, 9:18 pm
ஒன்றிய கல்வி திட்டத்தில் சேர்ந்ததால் கேரள ஆளும் கூட்டணியில் மோதல்
October 25, 2025, 9:07 pm
ம.பி.: தீபாவளி துப்பாக்கியால் பார்வை பாதிக்கப்பட்ட 100 பேர்
October 25, 2025, 8:39 pm
பெண் மருத்துவர் தற்கொலை: பாலியல் தொந்தரவு புகாரில் 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
October 24, 2025, 9:49 pm
இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்
October 24, 2025, 5:04 pm
அக்.27ஆம் தேதி உருவாக உள்ள புயலுக்கு மோன்தா என பெயர் சூட்டபட்டது: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
October 24, 2025, 1:04 pm
ஆந்திராவில் மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து தீப்பிடித்தது: 25 பயணிகள் உயிரிழப்பு
October 24, 2025, 12:35 pm

 
  
  
  
  
  
  
  
  
  
  
  
 