நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

வணிக, தொழில் நடவடிக்கைகளுக்காக மலேசியாவின் கதவுகள் திறந்தே இருக்கும்: மொஹைதின் யாசின்

புத்ராஜெயா:

நாட்டின் எல்லைகள் பெரும்பாலும் மூடப்பட்டிருந்தாலும், அனைத்துவிதமான வணிக, தொழில் நடவடிக்கைகளுக்காக மலேசியாவின் கதவுகள் திறந்தே உள்ளன என்று தேசிய மீட்பு மன்றத்தின் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் தெரிவித்துள்ளார்.

துபாயில் முப்பதுக்கும் மேற்பட்ட தொழில்துறை பிரமுகர்கள் பங்கேற்ற மதிய விருந்துபசரிப்பு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், கொரோனா பெருந்தொற்று காரணமாக மலேசியா எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்தும், இங்குள்ள வாய்ப்புகள் குறித்தும் விவரித்தார்.

"மலேசியாவின் பொருளியல் மற்றும் சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்புவது தொடர்பில், கொரோனா தொற்றுக்கு முன்பு இருந்ததைவிட மிக அதிகமான வாய்ப்புகள் தற்போது உள்ளன. மேலும், எங்களது எல்லைகள் மூடப்பட்டு இருந்தாலும், வணிக, தொழில் நடவடிக்கைகளுக்காக மலேசியாவின் கதவுகள் நிச்சயமாகத் திறந்திருக்கும். இதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

"முதலீட்டாளர்களுக்கான மதிப்பு விகிதாச்சாரம் மலேசியாவில் ஸ்திரமாக உள்ளது. மேலும் முதலீட்டுக்கான அமைப்பும் வலுவாக உள்ளது.

"தொழில் மேற்கொள்வதற்கான நடைமுறைகள் எளிதாக உள்ளன. மேலும், கொரோனா பிடியில் இருந்து நாடு மீண்டு வருகிறது.

"உள்கட்டமைப்பு, மின்னிலக்க கட்டமைப்புகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு திறமைகளும் ஆற்றலும் நிறைந்த மலேசியாவின் பொருளாதார அடிப்படைக் கூறுகள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன," என்று டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset