நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண போட்டியில் மெஸ்சியை பின்னுக்கு தள்ளி தங்க காலணியை எம்பாப்பே வென்றார்

நியூயார்க்:

உலகக் கிண்ண கால்பந்தில் தங்க காலணி விருதை இரண்டு முறை பெற்ற முதல் வீரராக பிரான்ஸின் கிளையன் எம்பாப்பே உருவெடுத்துள்ளார். 

2026 தொடரில் அவர் அதிக கோல் அடித்ததைத் தொடர்ந்து இந்த விருதை வென்றிருக்கிறார்.

8 போட்டிகளில் 10 கோல்கள் அடித்த எம்பாப்பே லியோனல் மெஸ்ஸியை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.

2022இல் கட்டாரில் நடைபெற்ற உலகக் கிண்ண தொடரில் 8 கோல்கள் அடித்து தங்க காலணி விருதை அவர் வென்றிருந்தார். 

அடுத்தடுத்த உலகக் கிண்ண போட்டியில் அவர் இதனைச் சாதித்திருக்கிறார்.

27 வயதான எம்பாப்பே, 1970இல் மேற்கு ஜெர்மனிக்கு விளையாடிய கேரட் முல்லரைத் தொடர்ந்து ஒரு உலகக் கிண்ண  தொடரில் இரட்டை இலக்கத்தில் கோல்கள் அடித்த முதல் வீரராகிறார்.

ஒட்டுமொத்த உலகக் கிண்ண போட்டியில் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலிலும் மெஸ்ஸியை விட ஒரு கோல் அதிகம் அடித்து 22 கோல்களுடன் எம்பாப்பே முதலிடத்தில் இருக்கிறார்.

உலக சாம்பியனான ஸ்பெயின் மற்ற விருதுகள் அனைத்தையும் அள்ளிச் சென்றது. 

அந்த அணியின் கேப்டன் ரோட்ரி தொடரின் சிறந்த வீரராக தங்கப் பந்து விருதை வென்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset