நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் தேர்தல்; இந்திய சமூகம் நீண்டகால நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: அரசியல் ஆய்வாளர்

சிரம்பான்:

வரவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், மாநில, மத்திய அரசுகளின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து, நீண்டகால அரசியல் ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு இந்திய சமூகம் தனது தேர்வை மேற்கொள்ள வேண்டும்.

அரசியல் ஆய்வாளர் டத்தோ அன்புமணி பாலன் இதனை கூறினார்.

அதிகாரப் போராட்டங்களை மட்டுமே நோக்கமாகக் கொண்ட அரசியல் சூழ்ச்சிகளால், சமூகம் தங்கள் வாக்குகளைப் பாதிக்க அனுமதிக்கக் கூடாது.

தேர்தல் பிரச்சாரங்களுக்கு அப்பால், நீண்டகால நிலைத்தன்மையை வழங்கக்கூடிய அரசியல் கூட்டணிகளை மதிப்பீடு செய்வதன் மூலம் இந்திய சமூகம் சிந்திக்க வேண்டும்.

பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்புகள், முதலீட்டு வரவுகள் மற்றும் மக்களின் நல்வாழ்வு ஆகியவற்றிற்கு நிலைத்தன்மையே அடித்தளமாகும். 

மேலும், ஒவ்வொரு மாநில அரசுக்கும் மதிப்பீடு செய்யப்பட வேண்டிய அதன் சொந்த சாதனைகள் உள்ளன.

அரசியல் அதிகாரப் போராட்டங்களில் இந்திய சமூகம் தன்னை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கக் கூடாது.

மிக முக்கியமாக, வாக்காளர்கள் நிரூபிக்கப்பட்ட சாதனைப் பதிவுகள், தெளிவான கொள்கைகள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைத் தொடர்வதில் அர்ப்பணிப்பு கொண்ட தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும், என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.

இந்திய சமூகம் ஒரு சிறுபான்மையினராக இருந்தாலும், மற்ற சமூகங்களுடன் இணைந்து நாட்டின் வளர்ச்சியில் அதன் பங்கை மறுக்க முடியாது.

குறிப்பாகக் கலப்புத் தொகுதிகளில், தேர்தல்களில் இந்திய சமூகத்தின் அரசியல் ஆதரவு பெரும்பாலும் ஒரு தீர்க்கமான காரணமாக இருந்துள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset