செய்திகள் உலகம்
FIFA உலகக் கிண்ண காற்பந்து போட்டி இறுதியாட்டம்: அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்கிறார்
வாஷிங்டன்-
FIFA உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் இறுதியாட்டத்தைக் காண அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகை தரவுள்ளார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அமெரிக்க வரலாற்றிலேயே அதிகம் பார்க்கப்பட்ட, மிகவும் பாதுகாப்பான மற்றும் மிகவும் வெற்றிகரமான உலகக் கோப்பையாக இது திகழ்கிறது. அவரது வருகை இந்த நிகழ்வுக்கு மகுடம் சூட்டும்.
இந்த தகவலை வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கரோலின் லியாவிட் கூறினார்.
"உலகின் மாபெரும் மேடையில் உலகை உபசரிக்கும் அமெரிக்காவின் திறனை வெளிக்காட்டிய ஒரு தொடருக்கு இது ஒரு பொருத்தமான முடிவு," என்று லீவிட் கூறினார்.
வெள்ளிக்கிழமை அன்று நியூயார்க்கில் உள்ள டிரம்ப் டவரில், கால்பந்தின் உலக நிர்வாக அமைப்பான ஃபிஃபா நடத்தும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் அமெரிக்கத் தலைவர் கலந்துகொள்வார் என்று லீவிட் கூறினார்.
FIFA உலகக் கிண்ண போட்டியின் இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா - ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 15, 2026, 4:06 pm
ஆஸ்திரேலியாவில் ஆண்களுக்கு எதிராக இணையப் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு
July 14, 2026, 9:58 pm
வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களைத் தரைமட்டமாக்கி வருகிறது ஈரான் இராணுவம்
July 14, 2026, 11:34 am
மெக்சிகோ நாட்டின் நெடுஞ்சாலையில் பயங்கர சாலை விபத்து: 10 பேர் பலி
July 14, 2026, 10:42 am
இங்கிலாந்தில் கடுமையான வெப்ப அலை: இதுவரை 2,700 பேர் வரை உயிரிழப்பு
July 14, 2026, 10:23 am
