செய்திகள் உலகம்
சீனாவில் தலைவிரித்தாடும் கடன் அட்டை பிரச்சினை: கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு
பெய்ஜிங்:
சீனாவில் கிரெடிட் அட்டை மூலம் கடன் பெற்றவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
வேலைவாய்ப்புச் சந்தை மந்தமாக இருப்பதாலும், சொத்துச் சந்தை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவதாலும் கடன் வாங்கிய பலர் அதைச் சரியான நேரத்தில் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர்.
குறைந்த வருமானம் கொண்ட சீனக் குடிமக்கள் மேலும் கடனில் மூழ்குவதால் இந்நிலைமை இன்னும் மோசமடையக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தடுமாறி வரும் தனது பொருளியலை மீட்கச் சீனா பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மக்களைக் கடன் வாங்கிச் செலவு செய்யுமாறு அது தீவிரமாக ஊக்குவித்து வருகிறது.
ஆனால், இப்போது கடன் நிலுவைகள் அதிகமாக ஏற்பட்டுள்ளது அந்நாட்டு அரசாங்கத்திற்குப் புதிய தலைவலியைக் கொடுத்துள்ளது.
பயனீட்டாளர்களுக்குக் கடன் வழங்குவதை அதிகரிக்குமாறு வணிக வங்கிகளைச் சீன மக்கள் வங்கி மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது. ஆனால், வங்கிகளோ வாராக்கடன்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளக் கடன் வழங்கும் விதிமுறைகளைக் கடுமையாக்கியுள்ளன.
அதேபோல் பெரும்பாலும் மோசமான கடன் தகுதி உள்ளவர்கள் மட்டுமே மீண்டும் மீண்டும் கடன் வாங்க விரும்புகிறார்கள்.
நல்ல கடன் தகுதி கொண்ட வாடிக்கையாளர்கள் தங்களது கடன் அட்டை பயன்பாட்டைக் குறைத்து வருகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 15, 2026, 4:06 pm
ஆஸ்திரேலியாவில் ஆண்களுக்கு எதிராக இணையப் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு
July 14, 2026, 9:58 pm
வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களைத் தரைமட்டமாக்கி வருகிறது ஈரான் இராணுவம்
July 14, 2026, 11:34 am
மெக்சிகோ நாட்டின் நெடுஞ்சாலையில் பயங்கர சாலை விபத்து: 10 பேர் பலி
July 14, 2026, 10:42 am
இங்கிலாந்தில் கடுமையான வெப்ப அலை: இதுவரை 2,700 பேர் வரை உயிரிழப்பு
July 14, 2026, 10:23 am
காட்டெருமை முட்டித் தூக்கி வீசியதில் 8 அடி உயரம் பறந்த முதியவர்
July 13, 2026, 11:37 am
