நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மாநில தேர்தலில் வெற்றிப் பெற்ற பிறகு தேசிய முன்னணி மந்திரி பெசாரின் பெயரை அறிவிக்கும்: ஜலாலுதீன் தகவல் 

சிரம்பான் - 

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிப்பெற்ற பிறகு புதிய மந்திரி பெசாரின் பெயர் அறிவிப்பு வெளியிடப்படும் 

இந்த தகவலை நெகிரி செம்பிலான் மாநில அம்னோ தலைவர் ஜலாலுதீன் அலியாஸ் கூறினார். 

தேசிய முன்னணி கூட்டணியில் மந்திரி பெசார் பதவிக்கு தகுதியான தலைவர்களுக்கு பற்றாக்குறை இல்லை என்றும் ஆனால் இறுதி முடிவை கூட்டணியின் உச்சக்கட்ட தலைமைத்துவமே தீர்மானிக்கு என்றும் அவர் குறிப்பிட்டார். 

புதிய மந்திரி பெசார் யார் என்று தேசிய முன்னணி தலைமையே முடிவு செய்யும் என்றும் எங்களிடம் திறமையான தலைவர்கள் உள்ளதாக அவர் சொன்னார். 

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக பெர்த்தாங் சட்டமன்ற தொகுதியில் ஜலாலுதீன் அலியாஸ் போட்டியிடுகிறார். 
குறிப்பிடத்தக்கது.

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset