நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பத்ரிநாத் கோவிலில் நன்கொடை, காணிக்கைகளில் ஊழல்: பொருளாளா் சந்தேஷ் மேத்தா நீக்கம் 

டேராடூன்:

உத்தரகண்டில் உள்ள பத்ரிநாத் கோவிலில் நன்கொடை, காணிக்கைகளில் கடுமையான ஊழல் முறைகேடு நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அந்தக் கோயில் பொருளாளா் சந்தேஷ் மேத்தா நீக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து பத்ரிநாத்-கேதாா்நாத் கோயில் குழுவின் தலைமை செயல் அதிகாரி சோஹன் சிங் கூறியதாவது:

பத்ரிநாத் கோயில் பெட்டகத்தில் இருந்த வெள்ளியின் அளவு, பதிவேட்டில் எழுதப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்தது. இதுகுறித்த விவரங்கள் பதிவேட்டில் திருத்தி எழுதப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து கோயில் பொருளாளா் பொறுப்பில் இருந்து சந்தேஷ் மேத்தா நீக்கப்பட்டுள்ளாா். அந்தப் பொறுப்புக்கு கோயிலின் பூஜை கவுன்ட்டரில் பணியாற்றிய கேதாா் சிங் நியமிக்கப்பட்டுள்ளாா். பூஜை கவுன்ட்டா் பணிக்கு சந்தேஷ் மேத்தா மாற்றப்பட்டுள்ளாா் என்று தெரிவித்தாா்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset