நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வியட்நாம் படகு விபத்து: இன்றிரவு இந்தியா வரும் உடல்கள்

புதுடெல்லி:

வியட்நாம் படகு விபத்தில் பலியான 15 இந்தியர்களின் உடல்கள் இன்று தாயகம் கொண்டு வரப்படுகின்றன.

இதுகுறித்து இந்திய தூதரகம் தனது எக்ஸ் தளப் பதிவில், "இந்த விமானம் ஹோ சி மின் சிட்டியிலிருந்து புறப்பட்டு, இந்திய நேரப்படி இரவு 9. 35 மணிக்கு மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.

மேலும் பலியானவர்களின் உடல்களை அவர்களின் சொந்த ஊர்களுக்குக் கொண்டு செல்வதற்காக, அந்தந்த மாநில அரசுகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த விபத்தில் தமிழகத்தைச் சோ்ந்த 10 போ் உள்பட 15 இந்திய பயணிகள் உயிரிழந்தனா். அவா்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அதேநேரம், 17 பயணிகள் மற்றும் 4 பணியாளா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். அவா்கள், ஃபூ குவோக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset