செய்திகள் இந்தியா
மட்டன் பிரியாணி போடாமல் சிக்கன் பரிமாறியதால் மோதல்: பிஹார் திருமணத்தில் 12 பேர் காயம்
பக்தியார்பூர்:
பிஹார் மாநிலத்தின் சஹர்சா மாவட்டம், சிம்ரி பக்தியார்பூர் நகரில் நடைபெற்ற திருமண விருந்தில் சிக்கன் பரிமாறப்பட்டது. அப்போது தங்களுக்கு மட்டன் பிரியாணி விருந்து அளிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்ததாக மணமகன் வீட்டார் குற்றம் சாட்டினர். இதில் இரு தரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.
ஒரு வீடியோ பதிவில், அங்கிருந்த நபர்கள் விருந்தினர்களைக் கம்புகளால் தாக்குவதையும் வாள்களை வீசுவதையும் காண முடிகிறது. சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து வந்த பிறகு அங்கு நிலைமை கட்டுக்குள் வந்தது.
திருமண நிகழ்ச்சியில் நடந்த இருதரப்பு மோதலில் 12 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிம்ரி பக்தியார்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 11, 2026, 7:20 pm
ஆல்கஹால் கலந்த இருமல் மருந்துகளுக்கு புதிய கட்டுப்பாடு: இந்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு
July 11, 2026, 1:29 pm
அமர்நாத் குகைக் கோயில் பனிலிங்கம் சுமார் 90 சதவீதம் வரை உருகி ஓடுகிறது
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 7, 2026, 12:55 pm
இந்தோனேசியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
July 4, 2026, 5:32 pm
