நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மட்டன் பிரியாணி போடாமல் சிக்கன் பரிமாறியதால் மோதல்: பிஹார் திருமணத்தில் 12 பேர் காயம்

பக்​தி​யார்பூர்:

பிஹார் மாநிலத்​தின் சஹர்சா மாவட்​டம், சிம்ரி பக்​தி​யார்பூர் நகரில் நடைபெற்ற திரு​மண விருந்​தில் சிக்​கன் பரி​மாறப்​பட்​டது. அப்​போது தங்​களுக்கு மட்​டன் பிரியாணி விருந்து அளிப்​ப​தாக வாக்​குறுதி அளிக்​கப்​பட்​டிருந்​த​தாக மணமகன் வீட்​டார் குற்​றம் சாட்​டினர். இதில் இரு தரப்​பிலும் வாக்​கு​வாதம் ஏற்​பட்டு கைகலப்பானது.

ஒரு வீடியோ பதி​வில், அங்​கிருந்த நபர்​கள் விருந்​தினர்​களைக் கம்​பு​களால் தாக்​கு​வதை​யும் வாள்​களை வீசுவதை​யும் காண முடிகிறது. சம்பவ இடத்​துக்கு போலீ​ஸார் விரைந்து வந்த பிறகு அங்கு நிலைமை கட்​டுக்​குள் வந்​தது.

திருமண நிகழ்ச்​சி​யில் நடந்த இருதரப்பு மோதலில் 12 பேர் காயம் அடைந்​தனர். இவர்​கள் சிம்ரி பக்​தி​யார்​பூரில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset