செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி பதவியேற்றார்
ஜொகூர்பாரு:
ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி இன்று அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.
இன்று மாலை இஸ்தானா புக்கிட் செரினில், ஜொகூரின் இடைக்கால சுல்தான், துங்கு மகோத்தா இஸ்மாயில் முன்னிலையில் அவர் பதவியேற்றார்.
நேற்று நடைபெற்ற 16ஆவது ஜொகூர் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் பதவியேற்பு விழா நடைபெற்றது.
மாச்சாப் சட்டமன்ற உறுப்பினரின் மறுநியமனத்திற்கு மக்களின் சிறப்பு ஆணை வலுவாக ஆதரவளித்தது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி, போட்டியிட்ட 56 மாநில சட்டமன்ற இடங்களில் 48 இடங்களை வென்று, தேசிய முன்னணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 26, 2026, 11:01 pm
டத்தோ பட்டம் பெற்ற டாக்டர் ஜஃப்ரீனா புருகானுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
August 26, 2026, 10:55 pm
நேப்பாள வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து 11 மலேசியர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது: விஸ்மா புத்ரா
August 26, 2026, 10:51 pm
சுதந்திர தினத்திற்கு முன்னதாக புகைமூட்டம் கட்டுப்பாட்டில் வர மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: பிரதமர்
August 26, 2026, 10:50 pm
தாபோங் ஹாஜியின் முன்னாள் தலைவர், முன்னாள் கருவூலச் செயலாளர் ஆகியோரை எம்ஏசிசி கைது செய்தது
August 26, 2026, 6:05 pm
