நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி பதவியேற்றார்

ஜொகூர்பாரு:

ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி இன்று அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.

இன்று மாலை இஸ்தானா புக்கிட் செரினில், ஜொகூரின் இடைக்கால சுல்தான்,  துங்கு மகோத்தா இஸ்மாயில் முன்னிலையில் அவர் பதவியேற்றார்.

நேற்று நடைபெற்ற 16ஆவது ஜொகூர் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் பதவியேற்பு விழா நடைபெற்றது.

மாச்சாப் சட்டமன்ற உறுப்பினரின் மறுநியமனத்திற்கு மக்களின் சிறப்பு ஆணை வலுவாக ஆதரவளித்தது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி, போட்டியிட்ட 56 மாநில சட்டமன்ற இடங்களில் 48 இடங்களை வென்று, தேசிய முன்னணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset