செய்திகள் மலேசியா
ஜொகூரில் தேசிய முன்னணி வெற்றி பெற்றதால் நான் எந்த நேரத்தில் வெளியே செல்ல முடியும்: நஜிப் கிண்டல்
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், தனது நிலை தொடர்பாக நம்பிக்கை கூட்டணி முன்வைத்த கூற்றுகள் குறித்து கேள்விகளையும் கிண்டலான தொனியையும் எழுப்பியுள்ளார்.
ஜொகூர் மாநிலத் தேர்தல் முன்னாள் பிரதமரை விடுவிப்பதற்காக மட்டுமே நடத்தப்பட்டது என்று ஒருமுறை கூறிய நம்பிக்கை கூட்டணி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தப் பதிவு வெளியிடப்பட்டதாக நம்பப்படுகிறது.
இன்று முகநூலில் ஒரு பதிவின் மூலம், அக்கட்சியின் கூற்றுகளை நஜிப் கேள்விக்குட்படுத்தியுள்ளார்.
நம்பிக்கை கூட்டணி ஜொகூர் மக்களிடம் பொய் சொல்ல முடியாது போலிருக்கிறது.
ஜொகூரில் தேசிய முன்னணி பெரிய வெற்றியைப் பெற்றதால், நஜிப் விடுதலையாகிவிடுவார் என கூறியது.
அப்படியானால், இன்று நான் விடுதலையாகிவிட்டேனா?.
ஏறக்குறைய எந்த நேரத்தில்? நான் வெளியே வர முடியும் என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
நஜிப்பின் இந்த பதிவு தற்போது வைரலாகியதுடன் பேசும் பொருளாகவும் உருவாகியுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 5:37 pm
ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி பதவியேற்றார்
July 12, 2026, 2:25 pm
ங்கா கோர் மிங் தனது ராஜினாமா வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: கைரி
July 12, 2026, 2:24 pm
நஜிப் விடுதலையானால் தான் நான் ராஜினாமா செய்வேன்; தேசிய முன்னணியின் வெற்றியால் அல்ல: ங்கா
July 12, 2026, 1:53 pm
ஜாஹித் ஹமிடி, ஓன் ஹபிஸ் ஆகியோர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்தனர்
July 12, 2026, 12:12 pm
ஜோகூர் தேர்தல்: 55 வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்
July 12, 2026, 10:41 am
