நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜோகூர் தேர்தல்:  55 வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்

ஜோகூர் பாரு:

நேற்று நடைபெற்ற 16வது ஜோகூர் மாநிலத் தேர்தலில் எண்ணப்பட்ட மொத்த வாக்குகளில் எட்டில் ஒரு பங்கைப் பெறத் தவறியதால், மொத்தம் 55 வேட்பாளர்கள் தங்களது வைப்புத்தொகையை இழந்தனர்.

பெர்சத்து கட்சியைச் சேர்ந்த 16 பேர், பாஸ் கட்சியைச் சேர்ந்த 11 பேர், மலேசிய இந்திய மக்கள் கட்சியைச் (MIPP) சேர்ந்த ஐந்து பேர், பெஜுவாங் கட்சியைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 33 வேட்பாளர்களை நிறுத்திய பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணியில், அதிகபட்சமாக 21 வேட்பாளர்கள் தங்களது வைப்புத்தொகையை இழந்தனர்.

இதற்கிடையில், நாட்டின் அரசியல் களத்திற்குப் புதியதாக நுழைந்த பார்ட்டி பெர்சமா மலேசியா (பெர்சமா), அதன் 15 வேட்பாளர்களும் தங்களது வைப்புத்தொகையை இழந்ததால் ஒரு பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

இதற்கிடையில், பக்கத்தான் ஹரப்பான் (PH) கூட்டணியைச் சேர்ந்த ஏழு வேட்பாளர்கள் தங்களது வைப்புத்தொகையை இழந்தனர்.

கூடுதலாக, ஆறு சுயேச்சை வேட்பாளர்கள், மலேசிய ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியைச் (MUDA) சேர்ந்த நான்கு வேட்பாளர்கள், பார்ட்டி ஒராங் அஸ்லி மலேசியா (ASLI), பார்ட்டி சோசலிஸ் மலேசியா (PSM) ஆகியவற்றைச் சேர்ந்த ஒரே வேட்பாளர்களும் தங்களது வைப்புத்தொகையை இழந்தனர்.

18 முதல் 40 வயதுக்குட்பட்ட வேட்பாளர்கள் அதிகபட்ச வைப்புத்தொகை இழப்புகளைப் பதிவு செய்தனர்; அந்த வயதுப் பிரிவில் போட்டியிட்ட 51 வேட்பாளர்களில் 41 சதவீதம் அல்லது 21 பேர் இந்த  டெபாசிட் இழந்தனர் 

16வது ஜோகூர் தேர்தலில், தேசிய முன்னணி (BN) போட்டியிட்ட 56 இடங்களில் 48 இடங்களை வென்று, மீண்டும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மாநில அரசை அமைத்தது.

அம்னோ 36 இடங்களையும், MCA எட்டு இடங்களையும், ம இ கா நான்கு இடங்களையும் வென்றன.

பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி எட்டு இடங்களை வென்றது (DAP ஆறு, PKR ஒன்று, அமானா ஒன்று) அதேசமயம் பக்கத்தான் நேஷனல், பெர்சமா, MUDA, ASLI, PSM மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் எந்த இடத்தையும் வெல்லத் தவறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset