நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் ஜசெக தோல்வியை ஒப்புக்கொள்கிறது; தேசிய முன்னணிக்கு வாழ்த்துகள்: தியோ நீ சிங்

ஜொகூர்பாரு:

ஜொகூர் ஜசெக தோல்வியை ஒப்புக்கொள்கிறது. தேசிய முன்னணிக்கு வாழ்த்துகள் என்று  ஜொகூர் ஜசெக தலைவர் தியோ நீ சிங் கூறினார்.

கட்சி மக்களின் முடிவை மதிப்பதாகவும், வாக்களிக்க வந்த அதன் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

பணிவுடன், ஜசெக இந்த முடிவை ஏற்றுக் கொண்டு, ஜொகூர் மக்களின் தேர்வை மதிக்கிறது.

தேசிய முன்னணியின் வெற்றிக்கு நாங்கள் வாழ்த்து தெரிவிக்கிறோம்.

வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், வழங்கப்பட்ட அனைத்து ஆதரவிற்கும் ஜசெக பெரிதும் பாராட்டுகிறது.

நிச்சயமாக, நாம் மேம்படுத்த வேண்டிய குறைபாடுகளும் பலவீனங்களும் உள்ளன.
நிச்சயமாக, இந்த முடிவு நாம் இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset