செய்திகள் மலேசியா
நஜிப் விடுதலையானால் தான் நான் ராஜினாமா செய்வேன்; தேசிய முன்னணியின் வெற்றியால் அல்ல: ங்கா
கோலாலம்பூர்:
ஜொகூர் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி மாபெரும் வெற்றி பெற்றால், வீட்மைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஒருபோதும் வாக்குறுதி அளிக்கவில்லை.
ஜசெஜ துணைத் தலைவர் ங்கா கோர் மிங் இதனை மறுத்துள்ளார்.
ஓரியண்டல் டெய்லிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் தனது கூற்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக ங்கா விளக்கினார்.
எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தனது தற்போதைய சிறைத் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டால் மட்டுமே ராஜினாமா செய்வதாக அவர் உறுதியளித்தார்.
1 எம்டிபியின் 51.4 பில்லியன் ரிங்கிட் கடனை மக்கள் மீது சுமத்திய நஜிப், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னரும் விடுவிக்கப்பட்டால்,
அது நாட்டின் நீதித்துறையின் நம்பகத்தன்மை குலைக்கப்பட்டுவிட்டது என்பதையும், சட்டத்தின் ஆட்சி எனும் கோட்பாடு இனி மதிக்கப்படவில்லை என்பதையும் குறிக்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 5:37 pm
ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி பதவியேற்றார்
July 12, 2026, 2:25 pm
ங்கா கோர் மிங் தனது ராஜினாமா வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: கைரி
July 12, 2026, 1:53 pm
ஜாஹித் ஹமிடி, ஓன் ஹபிஸ் ஆகியோர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்தனர்
July 12, 2026, 12:12 pm
ஜோகூர் தேர்தல்: 55 வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்
July 12, 2026, 10:41 am
