நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

நார்வே பெருமை கொள்ளலாம்: ஒடாகார்ட்

மியாமி:

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் தோல்வி கண்டாலும் நார்வே அணி அதை பெருமையாக கொள்ளலாம்.

நார்வே அணியின் கேப்டன் மார்ட்டின் ஒடாகார்ட் கூறினார்.

ஜூட் பெல்லிங்ஹாம் இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம், இங்கிலாந்து அணி நார்வேயை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, வரலாற்றில் நான்காவது முறையாக உலகக் கிண்ண போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியது.

இதனால் இப்போட்டியில் இருந்து நார்வே அணி வெளியேற்றப்பட்டது.

இருந்த போதிலும், 28 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக உலகக் கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றதற்காக நார்வே பெருமை கொள்ளலாம்.

இதை ஏற்றுக்கொள்வது மகிழ்ச்சியும் வருத்தமும் கலந்த ஒரு உணர்வு, ஆனால் இந்தப் பயணம் நம்ப முடியாததாக இருந்தது.

நாம் பெருமைப்பட வேண்டும்.

நீண்ட காலத்திற்குப் பிறகு இந்த மேடையில் ஏறிவிட்டோம், இப்போது எங்களுக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளோம்.

உலகமே முழுவதும் எங்களைப் பற்றிப் பேசுகிறது என்று நார்வே கேப்டன் மார்ட்டின் ஒடாகார்ட் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset