நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ணம்: நார்வேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து

மியாமி:

உலகமே ஆவலுடன் உற்று நோக்கும் உலகக் கிண்ண கால்பந்து போட்டி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது.

மியாமி நகரில்  நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனும், தரவரிசையில் 4ஆவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியும், 31ஆவது இடம் வகிக்கும் நார்வேயும் மோதின.

முதல் பாதியின் 36ஆவது நிமிடத்தில் நார்வே வீரர் ஆண்ட்ரியாஸ் ஸ்ஜெல்டெருப் அடித்த கோலால் அந்த அணி முன்னிலை பெற்றது.

இதற்கு பதிலடியாக, முதல் பாதி கூடுதல் நேரத்தின் 2ஆவது நிமிடத்தில் ஜூட் பெல்லிங்ஹாம் கோல் அடித்து இங்கிலாந்தை சமநிலைக்கு கொண்டு வந்தார்.

இதையடுத்து 90 நிமிடங்கள் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்ததால் ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு சென்றது.

கூடுதல் நேரத்தின் 93ஆவது நிமிடத்தில், நார்வே கோல் காவலரின் தவறை பயன்படுத்திக் கொண்ட ஜூட் பெல்லிங்ஹாம் தனது 2ஆவது கோலையும் பதிவு செய்து இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெறச் செய்தார்.

ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வர நார்வே வீரர்கள் கடுமையாக போராடினர்.

இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது. 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset