நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மின் விலைப்பட்டியல்களின் அமலாக்கத்தை மறுஆய்வு செய்ய புத்ராஜெயா ஒப்புக்கொண்டது: ஜாஹித்

கோலாலம்பூர்:

அந்நியத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட மின் விலைப்பட்டியல்கள், ஊழியர் சேமநிதி பங்களிப்புகளின் அமலாக்கத்தை மறுஆய்வு செய்ய அமைச்சரவை நேற்று ஒப்புக்கொண்டது.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த விவகாரம் ஒப்புக்கொள்ளப்பட்டதாக துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறினார்.

வர்த்தகர்களுக்கும் முதலாளிகளுக்கும் சுமையாகக் கருதப்பட்ட இந்த இரண்டு விதிமுறைகளின் அமலாக்கத்தை ஒத்திவைப்பதும், மற்ற நோக்கங்களுக்கிடையில், இந்த மறுஆய்வின் நோக்கமாகும்.

இந்த இரண்டு விஷயங்களுக்கான கோரிக்கையை தேசிய முன்னணியே  முன்மொழிந்தது.

மேலும், செய்யப்பட்ட பரிந்துரைகளுக்கு ஆதரவும் அங்கீகாரமும் வழங்கிய பிரதமர், ஒற்றுமை அரசாங்கம் மற்றும் அமைச்சரவையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.

ஜொகூர் பாருவில் உள்ள இஸ்கந்தர் புத்ரி சமூகத்தினருடன் நடைபெற்ற ஒரு சமூகக் கூட்டத்தில் பேசும்போது ஜாஹித் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset