நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குவந்தானில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து: மாற்றுத்திறனாளி ஆடவர் பரிதாபமாக பலி 

குவந்தான் - 

பகாங் மாநிலத்தின் குவாந்தான் நகரில் உள்ள தாமான் ஶ்ரீ மஹ்கோத்தா ஜெயாவில் இன்று காலை வீடொன்றில் தீ விபத்து நிகழ்ந்தது 

தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தீயின் புகை நுகர்வால் 60 வயதுடைய மாற்றுத்திறனாளி ஆடவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக குவாந்தான் தீயணைப்பு, மீட்புப்படைக்கு அவசர அழைப்பு கிடைத்தது என்றும் காலை 9 .40 மணியளவில் சம்பவம் நிகழ்ந்த இடத்தை விரைந்ததாகவும் அதிகாரி ரசாம் தஜா ரஹிம் கூறினார். 

வீட்டின் விருந்தினர் அறையில் தீ விபத்து நிகழ்ந்தது என்றும் சுமார் 15 விழுக்காடு வரை பொருட்கள் யாவும் மோசமாக சேதமடைந்ததாக அவர் சொன்னார். 

உயிரிழந்த ஆடவர் ஜி வித்தலிங்கம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று, புகை நுகர்ந்ததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 

தீ விபத்து குறித்து விசாரணைகள் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset