நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அயோத்தி ராமர் கோவிலைத் தொடர்ந்து மதுரா கிருஷ்ணர் கோயிலிலும் காணிக்கை திருட்டு

புதுடெல்லி: 

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயி​லில் காணிக்கை திருட்டு உறுதி செய்​யப்​பட்​டது. இந்​நிலை​யில், உ.பி.யில் மது​ரா​வில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி கோயி​லிலும் காணிக்கை திருட்டு நடந்​துள்​ள​தாக கிருஷ்ண ஜென்ம பூமி கோயில் நிலம் மீட்பு தொடர்​பான வழக்​கின் மனுதாரர்​களில் ஒரு​வ​ரான துறவி தினேஷ் பலஹாரி மகா​ராஜ் கூறி​யுள்​ளார்.

இதுகுறித்து விசா​ரிக்க எஸ்​ஐடி அமைக்க வேண்​டும் என்று முதல்வர் ஆதித்​ய​நாத்​துக்கு கோரிக்கை வைத்​துள்​ளார்.

இதுகுறித்​து, முதல்​வருக்கு துறவி தினேஷ் எழு​திய கடிதத்​தில், ‘‘கிருஷ்ணர் கோயிலுக்கு காணிக்​கை​யாக ரொக்​கம், தங்​கம், வெள்ளி ஆபரணங்​களைப் பக்​தர்​கள் வழங்கி வரு​கின்​றனர். அதில் முறை​கேடு​கள் நடக்​கின்​றன.

கோயில் நிர்​வாகி கிருஷ்ண ஜென்​மஸ்​தான் சேவா சன்​ஸ்​தான் செய​லா​ளர் கபில் சர்​மா, ரூ.1,000 கோடி மதிப்​புள்ள சொத்​து​களைச் சேர்த்​துள்​ளார். எனவே காணிக்கை குறித்து விசா​ரணை நடத்த வேண்​டும்’’ என்று வலியுறுத்தி உள்​ளார்.

மதுரா கோயிலை நிர்​வகிக்​கும் கிருஷ்ண ஜென்​மஸ்​தான் சேவா சன்​ஸ்​தானும், கோயில் நிதி முறை​கேடு குறித்து எஸ்​ஐடி விசாரிக்க வேண்​டும் என்று முதல்​வர் ஆதித்​ய​நாத்​துக்கு கடிதம் எழுதியுள்​ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset